ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரித்விராஜ் கடந்த சில வருடங்களில் ஒரு வெற்றிகரமான கமர்சியல் இயக்குனராகவும் தன்னை உருமாற்றிக் கொண்டார். அது மட்டுமல்ல இந்தியில் தற்போது படே மியான் சோட்டே மியான் என்கிற படத்திலும் தெலுங்கில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்திலும் வில்லனாகவும் நடித்து வருகிறார். இதற்கு அடுத்ததாக மோகன்லாலை வைத்து தான் இயக்கிய வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் என்கிற படத்தையும் இயக்க உள்ளார்.
இந்த நிலையில் முதன்முறையாக டிஜிட்டல் தளத்தில் அடியெடுத்து வைத்துள்ள பிரித்விராஜ் வெப்சீரிஸ் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார். இந்த வெப்சீரிஸை தயாரிக்கும் சரிகம இந்திய நிறுவனத்தின் துணைத்தலைவரான சித்தார்த் ஆனந்த் குமார் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
பிஸ்கட் கிங் ராஜன் பிள்ளை என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இந்த வெப் சீரிஸ் உருவாக இருப்பதாகவும் இதனை பிரித்விராஜே இயக்கவும் செய்கிறார் என்றும் ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகி இருந்தது. அதேசமயம் தற்போது இந்த வெப்சீரிஸ் குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும் பிரித்விராஜ் இதை இயக்குகிறாரா என்பது பற்றி இன்னும் தகவல் வெளியாகவில்லை.