அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் தில் ராஜு. கடந்த ஜனவரி மாதம் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தை தயாரித்தது இவர்தான். மேடைகளில் அதிரடியாக மற்றும் சர்ச்சையை கிளப்பும் விதமாக பேசுவதில் வல்லவரான தில் ராஜு தயாரிப்பில் சிறிய பட்ஜெட் படமாக கடந்த மாதம் பாலகம் என்கிற படம் வெளியானது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் நடிகர் விஜய் பற்றி கிண்டலாக பேசி சர்ச்சையில் சிக்கினார் தில் ராஜு.
தற்போது இந்த படம் வெளியாகி ஒரு மாதமே ஆன நிலையில் ஆந்திராவில் உள்ள பல கிராமங்களில் பொதுவெளியில் திரை கட்டி இந்த படத்தை திரையிட்டு ஊர் மக்கள் ரசித்துள்ளனர். இந்த படம் குடும்ப உறவுகளை பெருமைப்படுத்தும் வகையில் அதே சமயம் இளைஞர்களையும் கவரும் விதமாக பாமர கிராமத்து மக்களுக்கும் புரியும் விதமாக உருவாகியுள்ளதால் பலரும் இந்த படத்தை பாராட்டியதுடன் சினிமா தியேட்டருக்கே செல்லாத தங்கள் ஊர் மக்களும் பார்க்கட்டும் என்கிற நோக்கில் டிவிடி ப்ரொஜெக்டர் மூலமாக இதைத் திரையிட்டுள்ளனர்.
இதுகுறித்த வீடியோக்கள் தொடர்ந்து சோசியல் மீடியாவில் வெளியாகின. இதனால் அதிர்ச்சியான தில் ராஜு இப்படி அனுமதியின்றி பொதுவெளியில் தனது திரைப்படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அப்படி திரையிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்துள்ளாராம்.