தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான வக்கீல் சாப் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் அதிரடி வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடித்திருந்தார். வேணு ஸ்ரீராம் என்பவர் இயக்கியிருந்தார். ஹிந்தியில் அமிதாப் நடிப்பில் பிங்க் என்கிற பெயரில் வெளியாகி வரவேற்பை பெற்று பின்னர் தமிழில் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்கிற பெயரில் ரீமேக்கும் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த இரண்டு மொழிகளையும் தாண்டி தெலுங்கில் இந்த படம் வெளியான போது கமர்சியலாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதனைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தாங்களே முந்திக்கொண்டு உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார் இயக்குனர் வேணு ஸ்ரீராம். சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர், வக்கீல் சாப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார். பவன் கல்யாண் தற்போது தன் கைவசம் உள்ள படங்களை முடித்ததும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்.