இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கேரளாவில் ஒரு படம் தியேட்டரில் வெளியானால் 42 நாட்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியிடப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கமும், தியேட்டர் அதிபர்கள் சங்கமும் இணைந்து ஒப்பந்தம் செய்துள்ளனர். இதன்படி தான் கடந்த சில வருடங்களாக ஓடிடியில் மலையாளப் படங்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் கடந்த மாதம் ஜூட் அந்தோணி இயக்கத்தில் டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், கலையரசன், ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்த '2018' படம் வெளியானது. இந்தப்படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது. படம் தியேட்டரில் வெளியாகி 33 நாட்கள் ஆன நிலையில் இன்று முதல் ஓடிடியிலும் வெளியாகிறது. இதைக் கண்டித்து இன்றும், நாளையும் கேரளாவில் தியேட்டர்களை மூடி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இன்றும், நாளையும் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
“2018 படம் பல வருடங்களுக்கு பிறகு தியேட்டர் அதிபர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது. ஓடிடியில் 42 நாட்களுக்கு பிறகு வெளியிட்டால் மிக குறைந்த தொகையே கிடைக்கும். இப்போது கொடுத்தால் பெரும் தொகை கிடைக்கும். அப்படியென்றால்தான் தயாரிப்பாளர் லாபம் பெற முடியும். தியேட்டர் அதிபர்களின் நலனைப்போலவே தயாரிப்பாளரின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று படத்தின் தயாரிப்பு தரப்பு தெரிவிக்கிறது