மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

தெலுங்குத் திரையுலகத்தில் 30 சதவீத ஊதிய உயர்வு கோரி தெலுங்கு திரைப்படத் தொழிலாளர் சம்மேளத்தினர் கடந்த ஒரு வார காலமாக ஸ்டிரைக் செய்து வருகிறார்கள். அதனால், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் எந்த படப்பிடிப்பும் நடைபெறவில்லை. இது சம்பந்தமாக இதுவரையில் நடந்த பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.
இதனிடையே, தெலுங்கு திரைப்படத் துறையின் முன்னணி தயாரிப்பாளர்கள் சிலர் நேற்று ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் சினிமாடோகிராபி அமைச்சர் கண்டுல துர்கேஷைச் சந்தித்து ஸ்டிரைக் குறித்து ஆலோசித்துள்ளனர். இது தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையின் பொறுப்பின் கீழ் வந்தாலும், இது குறித்து ஆந்திர முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். வேறு சில முன்னணி தயாரிப்பாளர்கள் தெலுங்கானா மாநில சினிமாடோகிராபி அமைச்சர் கோமட்டிரெட்டி வெங்கட் ரெட்டியை ஹைதராபாத்தில் சந்தித்துப் பேசியுள்ளனர். பேச்சுவார்த்தை மூலம் இதற்கு தீர்வு காண வேண்டும் என இரண்டு தரப்பினரையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது ஒருபுறமிருக்க, இந்த விவகாரம் குறித்து முன்னணி தயாரிப்பாளர்கள் மற்றும் சிறிய தயாரிப்பாளர்களிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி தயாரிப்பாளர்கள் சிறிய தயாரிப்பாளர்களை கலந்தாலோசிக்காமல் அவர்களாகவே பேசி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.