தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த நித்தி அகர்வால் தமிழில் 'ஈஸ்வரன்' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ‛பூமி, கலகத் தலைவன்' உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஜோடியாக ‛ஹரிஹர வீர மல்லு' படத்தில் நடித்தார், இந்தப் படம் சமீபத்தில் வெளிவந்தது. படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு பவன் கல்யாணுடன் நித்தி அகர்வால் அரசு காரில் பயணம் செய்தார். இருவருக்கும் நெருக்கமான உறவு ஏற்பட்டிருப்பதாக டோலிவுட்டில் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில், ஆந்திர பிரதேச மாநிலம் பீமாவரம் நகரில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் நடிகை நித்தி அகர்வால் கலந்து கொண்டார். அப்போது அந்நிகழ்ச்சிக்கு அவர் ஆந்திர மாநிலத்தின் அரசு வாகனத்தில் வந்திருந்தார். இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், இது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தது.
இதுகுறித்து நித்தி அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள நான் வந்த வாகனம் விழா ஏற்பாட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. எனக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை, வாகனத்தைப் பயன்படுத்துமாறு எந்த அரசு அதிகாரிகளும் என்னிடம் கூறவில்லை” என தெரிவித்துள்ளார்.