‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு | டாக்டராக நடிக்கும் கவுரி கிஷன் : மெடிக்கல் கிரைம் திரில்லராக உருவாகும் ‛அதர்ஸ்' | சிங்கிளாக வரும் கூலி : ஏ சர்ட்டிபிகேட் பாதிப்பை தருமா...? | ‛அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே...' என ஆரம்பித்து வைத்த ‛களத்தூர் கண்ணம்மா' : திரையுலகில் 66 ஆண்டில் நுழையும் கமல் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: பரத் அணி செயற்குழு உறுப்பினர்கள் வெற்றி | கல்யாணி சூப்பர் உமனாக நடிக்கும் ‛லோகா': ஓணம் பண்டிகைக்கு ரிலீசாகிறது | அமெரிக்க முன்பதிவில் 'கூலி' புதிய சாதனை | இரண்டு மொழிகளில் வெளியாகும் 'பர்தா' | அரசு வாகனத்தில் சொகுசு பயணம்: சர்ச்சையில் சிக்கிய நித்தி அகர்வால் | நீடிக்கும் ஸ்டிரைக் - அமைச்சர்களை சந்தித்த தெலுங்கு தயாரிப்பாளர்கள் |
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு 'பராசக்தி' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பும் மும்முரமாக நடந்து வருகிறது. ஆரம்பத்தில் இந்த டைட்டிலை வைப்பதற்கு சிவாஜி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து முறைப்படி உரிமம் பெற்ற ஆதாரங்களை வெளியிட்ட பிறகு இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது.
இதே போன்று 40 வருடங்களுக்கு முன்பு ஒரு பிரச்னை உருவானது. 1985ம் ஆண்டு 'பராசக்தி' என்ற பெயரில் ஒரு படம் தயாரானது. ஏ ஜெகநாதன் இயக்கினார். சிவக்குமார், நளினி, ஜெய்சங்கர், கவுண்டமணி, செந்தாமரை உட்பட பலர் நடித்தனர். ஸ்ரீதேவி பகவதி பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரித்தது.
1952ம் ஆண்டு சிவாஜி நடித்த ‛பராசக்தி'யின் கதைக்கும் இந்த படத்தின் கதைக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் பராசக்தி என்கிற டைட்டிலை வைக்க கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அதனால் படத்தின் தலைப்பை 'மீண்டும் பராசக்தி' என்று மாற்றப்பட்டு படம் வெளியானது.