ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பிரபல இசையமைப்பாளர் மரகதமணி தெலுங்கில் கீரவாணி என்கிற பெயரிலும் தமிழில் மரகதமணி என்கிற பெயரிலும் இசை அமைத்து வருகிறார். குறிப்பாக இயக்குனர் ராஜமவுலியுடன் பல ஆண்டுகளாக தொடர்ந்து கூட்டணி அமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். கடந்தாண்டு இவரது இசையில் வெளியான ‛ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற நாட்டுக்கூத்து பாடலுக்காக ஆஸ்கர் விருதையும் பெற்றார். இவரது மகன்களில் ஒருவரான ஸ்ரீசிம்ஹா இளம் கதாநாயகனாகவும், இன்னொரு மகன் காலபைரவா இசையமைப்பாளராகவும் வலம் வருகின்றனர்.
தற்போது இந்த சகோதரர்களின் கூட்டணியில் 'பாக் சாலே' என்கிற படம் வரும் ஜூலை 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பிரனீத் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தின் டிரைலரை சமீபத்தில் பார்த்துவிட்டு தனது பாராட்டுக்களை வெளிப்படுத்தியுள்ளார் சிரஞ்சீவி.
மேலும், “ஸ்ரீ சிம்ஹா தனது முதல் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமாகும் வரை அவர் மரகதமணியின் மகன் என்பதே எனக்கு தெரியாது.. அந்த அளவிற்கு தான் ஒரு பிரபலத்தின் மகன் என்பதை வெளிப்படுத்தாமல் தனது சொந்த முயற்சியில் முன்னேறி வருகிறார். அவரது சகோதரர் காலபைரவாவும் இந்த படத்திற்கு அருமையான இசையை கொடுத்துள்ளார். இந்த படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.