தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சோசியல் மீடியாவில் குறிப்பிட்ட சிலர் வதந்திகளை உண்மைகள் போல பரப்புவதில் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர். சினிமா பிரபலங்கள் உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அவர்கள் உடல்நிலை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்னதாக இவர்களே அவர்கள் இறந்து விட்டதாக தகவலை பரப்புவார்கள். உயிருடன் திடகாத்திரமாக இருக்கும் நபர்களுக்கு கூட அடிக்கடி இது நடக்கும். அந்த வகையில் பிரபல மலையாள டிவி நடிகரான டி.எஸ் ராஜு என்பவர் இறந்து விட்டதாக சமீபத்தில் சோசியல் மீடியாவில் வதந்தி ஒன்று உண்மை செய்தி போல பரவியது.
மலையாளத்தில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் அஜு வர்கீஸ் இதை உண்மை என்று நம்பி தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டு தனது இரங்கலை தெரிவித்து இருந்தார். பின்னர் தான் இது வதந்தி என தெரிய வந்ததும் உடனே அதை டெலீட் செய்துவிட்ட அஜு வர்கீஸ் சம்பந்தப்பட்ட நடிகரிடம் சோசியல் மீடியா மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தனது வருத்தங்களை தெரிவித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார். குறிப்பாக மீடியாக்கள் முன்பாகவே நடிகர் டி.எஸ் ராஜுவுக்கு போன் செய்த அஜு வர்கீஸ் அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதாக கூறினார்.
சோசியல் மீடியாவில் வெளியான அவரது இறப்பு செய்தி அந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தது போன்று இருந்ததால் அதை உண்மை என நம்பிவிட்டேன் என்றும் கூறியுள்ளார் அஜு வர்கீஸ். இந்த வதந்தி குறித்து நடிகர் டி.எஸ் ராஜு கூறும்போது நான் தற்போது ஆரோக்கியமாக இருக்கிறேன்.. நான் சாகவேண்டும் என விரும்பும் யாரோ ஒரு நபர் முன்கூட்டியே எனக்கு ஒரு அறிவிப்பை கொடுத்துள்ளதாக இதை நினைக்கிறேன்” என்று நகைச்சுவையுடன் கூறியுள்ளார்.