தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் பிரித்விராஜ். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இயக்குனராகவும் மாறிய பிரித்விராஜ், இன்னொரு பக்கம் பிரித்விராஜ் புரொடக்சன் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கி படங்களை தயாரித்தும் விநியோகித்தும் வருகிறார். அந்த வகையில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட, விஜய்யின் மாஸ்டர், கேஜிஎப் 2, காந்தாரா என மிகப் பெரிய படங்களை கேரளாவில் இவரது நிறுவனம் தான் வெளியிட்டது. மேலும் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபனுடன் இணைந்தும் படங்களை தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பிரித்விராஜ் உள்ளிட்ட சில நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். அதில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் இந்திய மத்திய நிதி அமைச்சகம் பிரித்விராஜின் தயாரிப்பு நிறுவனம் கடந்த 2022-2023க்கான ஜிஎஸ்டி வருமான வரி கணக்குகளை எந்தவித குறைபாடும் இல்லாமல் தாக்கல் செய்துள்ளதாக தற்போது பாராட்டு சான்றிதழ் ஒன்றை வழங்கியுள்ளது.