திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
கார்த்திகேயா பட இயக்குனர் சாந்து மான்டேடி இயக்கத்தில் நாக சைதன்யா தனது 23வது படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவர் மீனவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது குஜராத்தில் நடந்த உண்மையான சம்பவத்தை மையப்படுத்தி பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படுகிறது என தகவல் ஏற்கனவே வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும், இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஸ்ரீ காகுலம் கிராமத்தில் உள்ள மீனவர் குடும்பத்தை நாக சைதன்யா மற்றும் படக்குழுவினர்கள் சந்தித்து அவர்களின் வாழ்க்கை முறைகளை தெரிந்து கொள்கின்றனர் என தெரிவித்துள்ளனர்.