தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மலையாளத்தில் கமர்சியல் ஆக்சன் கலந்த படங்களை இயக்குவதில் வித்தகர் என கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்திருப்பவர் இயக்குனர் ஜோஷி. மலையாளத் திரையுலகின் அனைத்து நட்சத்திரங்களும் ஒன்றிணைந்து நடித்த 20 - 20 படத்தை இயக்கியதும் இவர்தான். பெரும்பாலும் மோகன்லால், மம்முட்டி, திலீப் என முன்னணி நடிகர்களை மட்டுமே வைத்து இயக்கி வந்த ஜோஷி கடந்த சில ஆண்டுகளாகவே டைரக்சனில் சரிவை சந்தித்து வந்தார். அதன்பிறகு தனது திரையுலக வரலாற்றிலேயே முதன்முறையாக பெரிய அளவில் பிரபலமாகாத இரண்டாம் நிலை நடிகர்களை வைத்து தற்போது படங்களை இயக்கி வருகிறார்.
கடந்தாண்டு நடிகர் சுரேஷ் கோபியை வைத்து இவர் இயக்கிய பாப்பன் திரைப்படமும் பெரிய அளவில் இவருக்கு கை கொடுக்கவில்லை. தற்போது ஜோசு ஜார்ஜ், செம்பான் வினோத் என வில்லன் நடிகர்களை வைத்து ஆண்டனி என்கிற படத்தை இயக்கியுள்ளார் ஜோஷி. இந்த படம் விரைவில் வெளிவர இருக்கிறது.
இந்த நிலையில் மீண்டும் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன்லால் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ஜோஷி. படத்திற்கு 'ரம்பான்' என டைட்டில் வைக்கப்பட்டு, டைட்டில் குறித்த வீடியோ ஒன்றும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்படத்திற்கு விக்ரம் படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் செம்பான் வினோத் ஜோஸ் தான் கதை எழுதுகிறார். ஜோஷியின் டைரக்சனில் தொடர்ந்து கடைசியாக அவரது இரண்டு படங்களில் இவர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.