பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமான லூசிபர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படம் ஒரு கேங்ஸ்டர் கலந்த அரசியல் படமாக வெளியாகி கிட்டத்தட்ட நூறு கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என அப்போதே பிரித்விராஜ், மோகன்லால் கூட்டணி அறிவித்தனர். அதன்பிறகு சில வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் லூசிபர் 2 எம்புரான் என்கிற பெயரில் தயாராகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்து படப்பிடிப்பையும் துவங்கினார்கள்.
கடந்த சில வாரங்களாக லடாக் பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. மோகன்லால் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் இங்கே படமாக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் லடாக்கில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளதாக பிரித்விராஜ் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். லூசிபரை தொடர்ந்து ப்ரோ டாடி என்கிற படத்தையும் மோகன்லாலை வைத்து இயக்கி வெற்றியை கொடுத்த பிரித்விராஜ் இந்த எம்புரான் படம் மூலமாக ஹாட்ரிக் வெற்றியை ருசித்துவிடும் முனைப்புடன் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.