தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வரும் டிச-22ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் சலார். கே.ஜி.எப் இயக்குனர் பிரசாந்த் நீல் டைரக்சனில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் வில்லன் கலந்த நண்பனாக நடித்துள்ளார் பிரித்விராஜ். இந்த படத்தில் நடித்ததில் இருந்து இருவருக்கும் நெருங்கிய நட்பு உருவாகிவிட்டது. எந்த அளவிற்கு என்றால் இந்த உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் பிரபாஸுக்கு போன் செய்து ஒரு தேவை என்று சொன்னால் உடனடியாக அதை நிறைவேற்றித் தருவார் என்று கூறுகிறார் பிரித்திவிராஜ்.
மேலும் பிரபாஸ் பற்றி அவர் கூறும்போது, “பிரபாஸ் தன்னை சுற்றியுள்ள அந்த புகழ் வெளிச்சம் பற்றிய எண்ணமே இல்லாமல் இருக்கிறார். அந்த அளவிற்கு தன்னுடன் பழகுபவர்களை வசதியாக வைத்துக் கொள்கிறார். பிரபாஸ் பற்றி முழுமையாக ஒருவர் அறிந்து கொண்டால் நிச்சயம் அவரிடம் நட்பு பாராட்டாமல் இருக்க முடியாது” என்றும் கூறியுள்ளார்.
இது மட்டுமல்ல படப்பிடிப்பின் போது பிரித்விராஜூக்கு வழங்கப்பட்ட கேரவனை தன்னுடைய கேரவனை போன்றே மாற்றி தரும்படி அதன் வடிவமைப்பாளருக்கு உத்தரவிட்டு மாற்றி கொடுத்தாராம் பிரபாஸ்.