இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாள திரையுலகில் கடந்த 40 வருடங்களாக குணச்சித்திர நடிகராக நடித்து வந்தவர் நடிகர் மாமுகோயா. யதார்த்தமான நடிப்பிற்கு பெயர் போன இவர் காமெடியிலும் தனது முத்திரையை பதித்தார். கோழிக்கோட்டை சேர்ந்த இவர் கடந்த வருடம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். சமீபத்தில் கோழிக்கோட்டுக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற மோகன்லால் அங்கே இருக்கும் மாமுகோயாவின் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். மோகன்லாலுடன் அவரது ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான சத்யன் அந்திக்காடுவும் உடன் சென்றிருந்தார்.
மோகன்லாலும், மாமுகோயாவும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் இருவரின் காமெடியும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ஒன்று. மாமுகோயா இறந்த சமயத்தில் மோகன்லால் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்ததால் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வர முடியவில்லை. தற்போது கோழிக்கோடு நிகழ்ச்சியை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தானாகவே மாமுகோயாவின் வீட்டிற்கு சென்று அவர்கள் குடும்பத்தினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார் மோகன்லால்.