'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை |

மலையாள திரையுலகில் கடந்த 40 வருடங்களாக குணச்சித்திர நடிகராக நடித்து வந்தவர் நடிகர் மாமுகோயா. யதார்த்தமான நடிப்பிற்கு பெயர் போன இவர் காமெடியிலும் தனது முத்திரையை பதித்தார். கோழிக்கோட்டை சேர்ந்த இவர் கடந்த வருடம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். சமீபத்தில் கோழிக்கோட்டுக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற மோகன்லால் அங்கே இருக்கும் மாமுகோயாவின் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். மோகன்லாலுடன் அவரது ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான சத்யன் அந்திக்காடுவும் உடன் சென்றிருந்தார்.
மோகன்லாலும், மாமுகோயாவும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் இருவரின் காமெடியும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ஒன்று. மாமுகோயா இறந்த சமயத்தில் மோகன்லால் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்ததால் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வர முடியவில்லை. தற்போது கோழிக்கோடு நிகழ்ச்சியை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தானாகவே மாமுகோயாவின் வீட்டிற்கு சென்று அவர்கள் குடும்பத்தினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார் மோகன்லால்.