குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி |

மலையாளத்தில் திரிஷ்யம்
என்கிற சூப்பர் ஹிட் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்
ஜீத்து ஜோசப். தொடர்ந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் விதமான வெற்றிப்
படங்களை கொடுத்து இந்திய அளவில் மிகப்பெரிய இயக்குனர் என்கிற பெயரையும்
பெற்றுவிட்டார். இந்த நிலையில் தற்போது திரைப்படங்களையும் தாண்டி
வெப்சீரிஸ் உலகில் அடி எடுத்து வைத்துள்ளார் ஜீத்து ஜோசப். ஆனால்
இயக்குனராக அல்ல, ஒரு தயாரிப்பாளராக.. ஆம் ஹாட் ஸ்டார் நிறுவனத்திற்காக
'ரோஸ்லின் ; சீக்ரெட் ஸ்டோரீஸ்' என்கிற வெப்சீரிஸை தயாரிக்கிறார் ஜீத்து
ஜோசப்.
இந்த வெப்சீரிஸை இவரிடமும் இன்னொரு பிரபல இயக்குனரான அன்வர்
ரஷீத்திடமும் உதவி இயக்குனராக பணியாற்றிய சுமேஷ் நந்தகுமார் என்பவர்
இயக்குகிறார். அதுமட்டுமல்ல இந்த வெப்சீரிஸுக்கு விநாயகன் சசிகுமார்
என்பவர் தான் கதை, திரைக்கதை எழுதுகிறார். அந்தவகையில் இந்த வெப்சீரிஸில்
ஜீத்து ஜோசப்பின் பங்கு வெறும் தயாரிப்பாளர் மட்டுமே. கடந்த சில
தினங்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.