வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

பெரும்பாலும் பிரபல ஹீரோக்கள் தங்களது படங்களின் ரிலீஸ் சமயத்தில் பேசும்போது, குடும்பத்தினர் அனைவரும் தியேட்டருக்கு வந்து இந்த படத்தை பார்த்து ரசிக்க வேண்டும் என கோரிக்கை வைப்பார்கள். நடிகர் பிரித்விராஜும் தனது படங்களுக்கு அப்படித்தான் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைக்கிறார். ஆனால் தான் நடித்த படங்களை இதுவரை தனது மகளுக்கு காட்டியது இல்லை என்கிற ஒரு ஆச்சரியமான தகவலையும் அவர் சமீபத்தில் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் கூறும்போது, “நான் நடித்த படங்களை இதுவரை ஒன்பது வயதான என் மகளுக்கு காட்டியதில்லை. காரணம் அவள் படம் பார்க்கும்போது அதன் ஹீரோவாக என்னை பார்க்க மாட்டாள். ஒரு தந்தையாக தான் படத்திலும் என்னை பார்ப்பாள். அது அவளுக்குள் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்பதால் தான் இதை கடைபிடித்து வருகிறேன்.
அதேசமயம் தற்போது நான் நடித்துள்ள ஆடுஜீவிதம் படம் இதிலிருந்து ஒரு விதிவிலக்கு என்று சொல்லலாம். காரணம் இந்த படத்தை என் மகள் பார்க்கும்போது உண்மையான சினிமா என்ன என்கிற அனுபவத்தை உணர்ந்து கொள்வாள் என்கிற நம்பிக்கையும் தொழில் ரீதியாக நான் ஒரு நடிகர் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியும் என்கிற எண்ணமும் தான் காரணம்” என்று கூறியுள்ளார்.