தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள 'ஆடுஜீவிதம்' திரைப்படம் வரும் மார்ச் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. பிளஸ்சி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த படம் பென்யமின் என்கிற எழுத்தாளர் எழுதிய ஆடுஜீவிதம் என்கிற நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. அரபு நாட்டுக்கு வேலைக்குச் சென்று அங்கே ஒட்டகம் மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு பல சிரமங்களை சந்தித்த நஜீப் என்பவரின் நிஜமான வாழ்க்கை சம்பவங்களை மையப்படுத்தியே இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்த கதையின் நிஜ ஹீரோவான நஜீப்புக்கு 'ஆடுஜீவிதம்' திரையிட்டு காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த நஜீப் மிகவும் நெகிழ்ந்து போய் கண்கலங்கி விட்டார். இது குறித்து அவர் கூறும்போது, இயக்குனர் பிளஸ்சியும், பிரித்விராஜும் சேர்ந்து தான் வாழ்ந்த நிஜமான வாழ்க்கையை திரையில் காட்டி உள்ளார்கள் என்றும் குறிப்பாக ஒருநாள் பிரித்விராஜ் தூங்கி விழித்து வலியுடன் எழும்போது தனது மனைவி பெயரை கூவி அழைக்கும் காட்சியில் தனது கண்களில் கண்ணீர் வந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.
மேலும் பிரித்விராஜ் நீண்ட நாட்களாக தன் முகத்தை தானே பார்க்க முடியாத நிலையில் ஒருநாள் கண்ணாடியில் பார்த்து அதிர்ச்சி அடையும் காட்சியானது, அதேபோன்று தான் நிஜத்தில் அனுபவித்த கொடுமையை நினைவூட்டியது என்றும் கூறியுள்ளார். இந்த படத்தை தனது குடும்பத்தினரும் நண்பர்களும் திரையரங்கில் பார்க்க ஆவலாக இருப்பதாக கூறியுள்ளார் நஜீப்.