நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது |
பிளஸ்சி இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், பிருத்விராஜ், அமலாபால் மற்றும் பலர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் 'ஆடு ஜீவிதம்'. இப்படம் 25 நாட்களில் 150 கோடி வசூலைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் இதன் அலை பரவியுள்ளது. உங்களதுஅன்பான ஆதரவுக்கு நன்றி என படத்தின் கதாநாயகன் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.
படம் வெளியான 3 நாட்களில் 50 கோடி, 10 நாட்களுக்குள் 100 கோடி, 25 நாட்களுக்குள் 150 கோடியை வசூலித்துள்ளது. இந்த ஆண்டில் மலையாளத்தில் வெளியான படங்களில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படம் 200 கோடிக்கு அதிகமாக வசூலித்து முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து 150 கோடி வசூலித்து 'ஆடு ஜீவிதம்' இரண்டாவது இடத்தில் உள்ளது. 'பிரேமலு' படம் 130 கோடியைக் கடந்துள்ளது.
மலையாளத்தில் ஒரே ஆண்டில் இரண்டு படங்கள் 150 கோடி வசூலைக் கடப்பது இதுவே முதல் முறை. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் ஒரு படம் 100 கோடி வசூலைக் கடக்கவில்லை.