23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் வெளியான படம் காந்தாரா. இந்த படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்திருந்தார் பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி. இந்த படம் கன்னடத்தில் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கேஜிஎப் படத்தின் மூலம் எப்படி யஷ் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய நடிகராக மாறினாரோ அதற்கு அடுத்ததாக ரிஷப் ஷெட்டிக்கும் அந்த அளவிற்கு ரசிகர் வட்டம் சேர்ந்தது.
இதைத் தொடர்ந்து தற்போது காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ரிஷப் ஷெட்டி. இந்த நிலையில் நடிகர் மோகன்லாலை சமீபத்தில் சந்தித்துள்ளார் ரிஷப் ஷெட்டி. இது குறித்து அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள ரிஷப் ஷெட்டி, “ஜாம்பவான் நடிகர் மோகன்லாலை சந்தித்ததில் மிகப்பெரிய கௌரவமும் மகிழ்ச்சியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின்போது ரிஷப் ஷெட்டியின் மனைவி பிரகதியும் உடன் இருந்தார். மோகன்லால் பெங்களூர் சென்றபோது இந்த சந்திப்பு நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.