ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லாலுக்கு பிறகு அடுத்த இடத்தில் பயணித்து வந்தவர் நடிகர் திலீப். ஆனால் கடந்த 2016ல் நடிகை கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட பிறகு திரையுலகிலும் பர்சனல் ஆகவும் நிறைய பிரச்சனைகளை சந்தித்த திலீப் திரையுலகில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து வருகிறார். கடந்த எட்டு வருடங்களில் ஓரிரு வெற்றி படங்களை மட்டுமே கொடுத்துள்ளார். குறிப்பாக கடந்த 2019ல் வெளியான கோடதி சமக்சம் பாலன் வக்கீல் என்கிற படம் தான் கடைசியாக அவருக்கு ஒரு டீசன்டான வெற்றியை பெற்று தந்தது.
அதன் பிறகு இந்த ஐந்து வருடங்களில் தொடர்ந்து வெளியான அவரது ஏழு படங்களும் தோல்வி படங்களாகவே அமைந்தன. அதிலும் கடைசியாக வெளியான பாந்த்ரா மற்றும் கடந்த மாதம் வெளியான தங்கமணி ஆகிய படங்கள் மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை தழுவின. இந்த நிலையில் தங்கமணி படம் வெளியாகி சரியாக 50 வது நாளில் வரும் ஏப்-26 ஆம் தேதி திலீப் நடித்துள்ள பவி கேர் டேக்கர் என்கிற படம் வெளியாக இருக்கிறது.
வினீத் குமார் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். முன்னதாக வெளியான திலீப்பின் மூன்று படங்களும் சீரியஸான கதையம்சம் கொண்டதாக இருந்ததன. இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை அம்சத்துடன் வழக்கமான ஒரு திலீப் படமாக உருவாகியுள்ளதாம். அதனால் இந்த பவி கேர்டேக்கர் படம் திலீப்புக்கு ஒரு வெற்றி படமாக அமைந்து அவரை கை தூக்கிவிடும் என எதிர்பார்க்கலாம்.