ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்குத் திரையுலகத்தின் முக்கிய குடும்பங்களில் ஒன்று சிரஞ்சீவி குடும்பம். அவருடைய தம்பிகள், தம்பி மகன்கள், என பலரும் நடிகர்களாக உள்ளனர். சிரஞ்சீவியின் கடைசி தம்பியான பவன் கல்யாண், ஜனசேனா கட்சியை நடத்தி வருகிறார்.
நாளை நடைபெற உள்ள ஆந்திர சட்டசபைத் தேர்தலில் ஜனசேனா, தெலுங்கு தேசம், பா.ஜ., ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. பித்தாபுரம் தொகுதியில் பவன் கல்யாண் போட்டியிடுகிறார். நேற்றுடன் அங்கு பிரசாரம் முடிவடைந்தது.
நடிகர் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண், அவரது அம்மா சுரேகா நேற்று பித்தாபுரம் சென்றிருந்தனர். அங்குள்ள குக்குடேஸ்வர சுவாமி கோவிலுக்குச் சென்று வழிபட்டனர். பித்தாரபுரத்தில் உள்ள பவன் கல்யாண் வீட்டிற்கும் சென்று பவன் கல்யாணை சந்தித்து தேர்தலில் வெற்றிப் பெற வாழ்த்து தெரிவித்தனர். அப்போது தயாரிப்பாளரும், நடிகர் அல்லு அர்ஜுனின் அப்பாவுமான அல்லு அரவிந்த் உடனிருந்தார்.
அப்பா அல்லு அரவிந்த், பவன் கல்யாணை சந்தித்து வாழ்த்து சொல்லி, மகன் அல்லு அர்ஜுனோ ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் நந்தியால் தொகுதியில் போட்டியிடும் அவருடைய நண்பர் ரவிசந்திர கிஷோர் ரெட்டிக்கு ஆதரவாக நேற்று பிரசாரம் செய்தார்.