ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ்த் திரையுலகத்தைப் போலவே தெலுங்குத் திரையுலகமும் இந்த ஆண்டில் இதுவரையில் வசூல் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவுக்காவது ஒரே ஒரு 'அரண்மனை 4' படம் கிடைத்தது. ஆனால், தெலுங்கில் அப்படி ஒரு படம் கூட அமையவில்லை. இருந்தாலும் 'கல்கி 2898 எடி, புஷ்பா 2, தேவரா' என சில பெரிய படங்கள் அங்கு வர இருப்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.
இருந்தாலும் இனிமேல் அதிகாலைக் காட்சிகள், ரசிகர் மன்றக் காட்சிகள் ஆகியவற்றை நடத்த அனுமதிக்கப் போவதில்லை என தெலுங்கானா தியேட்டர்காரர்கள் முடிவெடுத்துள்ளார்களாம். இந்த திடீர் முடிவு தெலுங்கு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அதிகாலைக் காட்சிகள், ரசிகர் மன்றக் காட்சிகள் மூலம் தயாரிப்பாளர்களுக்கும் நல்ல வருவாய் கிடைத்து வந்தது. நடிகர்களுக்கும் ஒரு ஓபனிங் கிடைக்கக் காரணமாக இருந்தது. இந்நிலையில் தெலுங்கானா தியேட்டர்காரர்களின் முடிவு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே அதிகாலை காட்சிகள் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டுவிட்டன. காலை 9 மணிக்கு மேல்தான் இங்கு காட்சிகள் நடைபெறுகிறது.