ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு நடிகர் பிரித்விராஜ் முதல் முறையாக லூசிபர் என்கிற படம் மூலம் இயக்குனராகவும் மாறினார். மோகன்லாலை கதாநாயகனாக வைத்து இவர் இயக்கிய லூசிபர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என்றும் அதற்கு எம்புரான் என டைட்டில் வைக்கப்பட்டதாகவும் அப்போதே அறிவித்தார் பிரித்விராஜ். ஆனால் மோகன்லால், பிரித்விராஜ் இருவரும் தங்களது படங்களில் பிசியாக நடித்து வந்ததால் லூசிபர் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது சமீபத்தில் திருவனந்தபுரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து அடுத்ததாக இதன் படப்பிடிப்பு குஜராத் மற்றும் துபாயில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படம் குறித்து பேசிய மோகன்லால் இந்த வருடம் டிசம்பர் மாதம் அல்லது 2025 ஜனவரியில் நிச்சயமாக லூசிபர் 2 வெளியாகும் என்று கூறியுள்ளார்.