தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தற்போது தமிழில் ‛கூலி, மதராஸி, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, ஜெயிலர்- 2, ஜனநாயகன்' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைக்கும் அனிருத், தெலுங்கில் ‛கிங்டம்' படத்தை அடுத்து ‛தி பாரடைஸ், டாக்ஸிக், கிங்' என பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில், அனிருத் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், தனக்கு தேவைப்படும்போது ‛சாட் ஜிபிடி'-ஐ பயன்படுத்தி தான் இசையை உருவாக்குவதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, ‛‛சமீபத்தில் ஒரு பாடலுக்கு என கம்போசிங்கில் நான் ஈடுபட்டிருந்த போது இரண்டு வரிகளில் சிக்கிக்கொண்டேன். அப்போது அதை சாட் ஜிபிடி-க்கு எடுத்துச் சென்று சந்தா வாங்கி ஏஐ இடம் எனக்கு உதவுமாறு கேட்டேன். அப்போது சாட் ஜிபிடி எனக்கு சுமார் 10 ஆப்ஷன்களை வழங்கியது. அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து எனது இசைப் பணியை தொடர்ந்தேன்'' என்று வெளிப்படையாக கூறியுள்ளார் அனிருத்.
அதோடு சில சமயங்களில் சரியான இசை தொகுப்புகள் கிடைக்காமல் தவிக்கும் போது இதுபோன்று ஏஐ-யின் உதவியை நாடுவதில் எந்த தயக்கமும் எனக்கு இல்லை என்கிறார் அனிருத்.