ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமீபத்தில் நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாண் தனது ஜனசேனா கட்சி மூலமாக தான் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் வெற்றியை பெற்றுள்ளார். முதன்முறையாக அவர் ருசிக்கும் மாபெரும் வெற்றி இது என்பதால் அவருக்கு தெலுங்கு திரையுலகில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில் டில்லி சென்ற பவன் கல்யாண் தன்னுடன் தனது இரண்டாவது மனைவி ரேணு தேசாயின் மகன் அகிரா நந்தனையும் உடன் அழைத்துச் சென்றிருந்தார். பிரதமராக இருக்கும் நரேந்திர மோடிக்கு பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் பவன் கல்யாண்.
தானும் தந்தையும் பிரதமர் மோடியுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது தாய்க்கு அனுப்பி வைத்த அகிரா நந்தன், பிரதமரை சந்தித்த அந்த கணம் குறித்து சிலாகித்து விவரித்துள்ளார். ஏற்கனவே பாஜகவில் இருக்கும் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி ரேணு தேசாய் தனது மகன் பிரதமரின் அருகில் நிற்பதைக் கண்டு பூரிப்பில் மகிழ்ச்சி அடைந்ததாகவும் அதே சமயம் ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டதாகவும் கூறியுள்ளார்.