தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் |
சமீபகாலமாக பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் தியேட்டர் வருமானத்தை மட்டுமே கணக்கில் கொள்ளாமல் சாட்டிலைட் மற்றும் ஓடிடி வியாபாரங்களை நம்பியே முதலீடு செய்கின்றன. சில படங்களுக்கு வெளியாவதற்கு முன்பே ஓடிடி வியாபாரம் முடிந்து விடுகிறது. ஆனால் பல படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி தோல்வியை சந்திக்கும்போது ஓடிடி வியாபாரத்தில் சிக்கலை சந்திக்கின்றன. தற்போது மலையாள நடிகர் திலீப்பின் படங்கள் இதேபோன்ற சிக்கலில் தான் சிக்கித் தவிக்கின்றன
கடந்த வருடம் திலீப் நடிப்பில் பாந்த்ரா, தங்கமணி, பவி கேர்டேக்கர் என அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியாகின. இந்த மூன்று படங்களுமே எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறவில்லை. இதனால் படம் வெளியாவதற்கு முன்பு படத்தை வாங்கிக் கொள்வதாக வாக்குறுதி அளித்த ஓடிடி நிறுவனங்கள் படத்தின் ரிசல்ட்டை பார்த்த பிறகு இப்போது வரை பாராமுகம் காட்டி வருகின்றனவாம். இதையடுத்து திலீப் நீண்ட நாட்களாக நடித்து வரும் பறக்கும் பாப்பன் மற்றும் அவரது 150 வது படம் ஆகியவற்றின் தயாரிப்பிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.