ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகர் திலீப் நடிப்பில் சமீப காலங்களில் வெளியான பாந்த்ரா, தங்கமணி, பவி கேர்டேக்கர் என அடுத்தடுத்த படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றன. முன்பெல்லாம் கதையில் கவனம் செலுத்திய நடிகர் திலீப் தற்போது கதைகளை தேர்வு செய்வதில் கோட்டை விடுகிறாரோ என்று அவரது ரசிகர்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தன்னுடைய அடுத்த படத்தை எப்படியேனும் வெற்றி படமாக கொடுத்து விட வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறார் திலீப். அந்த வகையில் அவர் தற்போது நடித்துவரும் படம் ‛பா பா பா'. இந்த படத்தில் திலீப்புடன், சகோதர நடிகர்களான வினித் சீனிவாசன் மற்றும் தியான் சீனிவாசன் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் தனஞ்செய் சங்கர் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தின் கதையை இயக்குனருடன் சேர்ந்து நடிகை நூரின் ஷெரீப் மற்றும் நடிகர் பஹிம் ஜாபர் இருவரும் இணைந்து உருவாக்கியுள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் ஒரு அடார் லவ் என்கிற படம் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து புருவ அழகி என புகழ்பெற்ற பிரியா பிரகாஷ் வாரியரை போலவே அதில் இன்னொரு கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் இந்த நூரின் ஷெரீப். கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு குட் பை சொல்லிவிட்டு தற்போது கதை, டைரக்சனில் கவனத்தை திருப்பியுள்ளார் நூரின் ஷெரீப். இவருடன் இணைந்து இந்த கதையை எழுதும் பஹிம் ஜாபர் இவரது காதல் கணவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.