ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு |
கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வயநாடு பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவு பாதிப்பு காரணமாக 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பல நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்து தரைமட்டமான நிலையில் வீடு இழந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைவரும் மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு நிவாரண உதவிகளை பெற்று வருகின்றனர். மலையாளம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு திரை உலகை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் பலரும் தங்களால் இயன்ற தொகையை பாதிக்கப்பட்டவர்களின் நிவாரண நிதிக்காக தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் மலையாள நடிகர் சங்கமான 'அம்மா', மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன் ஒன்றிணைந்து இந்த நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக நிதி திரட்டும் விதமாக கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருக்கிறது. இது குறித்த தகவலை நடிகரும், நடிகர் சங்க செயலாளருமான நடிகர் சித்திக் அறிவித்துள்ளார். வரும் ஆக., 20ம் தேதி கேரளாவில் உள்ள அங்கமாலி நகரத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது..
இது பற்றி அவர் கூறும்போது, “இந்த நிகழ்ச்சியை நாங்கள் வேறு ஒரு சமயத்தில் நடத்தலாம் என்று தீர்மானித்திருந்தோம். அதுமட்டுமல்ல இப்படி ஒரு பாதிப்பு நடக்கும் நேரத்தில் இது போன்ற நிகழ்ச்சியை நடத்துவது சரியல்ல என்றாலும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக வரும் ஆகஸ்ட் 20ம் தேதி மழவில் விருது வழங்கும் விழா நிகழ்ச்சியை நடத்த தீர்மானித்துள்ளோம். இந்த நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் தொகையை அப்படியே நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணத்திற்காக வழங்க இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.