ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கு இளம் முன்னணி நடிகர் நாக சைதன்யா மற்றும் அவரது காதல் மனைவி நடிகை சமந்தா இருவரும் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு கடந்த இரண்டு வருடங்களாக பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா துலிபாலாவுடன் நாகசைதன்யா காதலில் விழுந்துள்ளதாக பலமுறை பரபரப்பு செய்திகளில் அடிபட்டார். இந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வெகு விரைவில் இவர்களது திருமணமும் நடைபெற இருக்கிறது.
அதே சமயம் ஆந்திராவைச் சேர்ந்த ஜோதிடரான வேணு சுவாமி என்பவர் நாகசைதன்யா - சோபிதா ஜோடி 2027க்குள் பிரிந்து விடுவார்கள் என்றும் அதற்கும் ஒரு பெண் காரணமாக இருப்பார் என்றும் ஜோதிடம் கணித்துக் கூறியது சலசலப்பையையும் சர்ச்சையும் ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பெண்கள் உரிமை ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க இந்த ஜோதிடரின் மனைவியான வீணா என்பவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் நாகசைதன்யா-சோபிதா ஜோடிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், நீங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இவர்கள் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்ததற்காக நாகசைதன்யா தனக்கு மிகப்பெரிய பரிசு ஒன்றை தர வேண்டும் என்று பகிரங்கமான கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார். தனது கணவரின் சர்ச்சை பேச்சை திசை திருப்பி அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே இவர் இப்படி நாகசைதன்யாவுக்கு ஐஸ் வைக்கும் விதமாக பேசி உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.