ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாள திரையுலகில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருப்பவர் நடிகர் மோகன்லால். சமீபத்திய ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக நடிகர் சங்கத்தில் தான் பொறுப்பு வகித்து வந்த தலைவர் பதவியை கூட ராஜினாமா செய்யும் அளவிற்கு கடினமான சூழலை எதிர்கொண்டு வருகிறார். குறிப்பாக பல நடிகர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைக்கும் நடிகைகள் அனைவருமே தங்கள் விஷயத்தில் நடிகர் சங்கம் ஆதரவாக நிற்கவில்லை என்று குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து மோகன்லால் தனது நடிகர் சங்க பதவியை செய்தார்.
இன்னொரு பக்கம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது மனைவிக்கு முக்கியமான அறுவை சிகிச்சை ஒன்றும் சென்னையில் நடைபெற்றது. இப்படி ஒரு கடின சூழலை எதிர்கொண்டு வரும் மோகன்லாலுக்கு சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்று மிகப்பெரிய ரிலாக்ஸ் ஆக அமைந்துள்ளது.
கடந்த 1987ல் மோகன்லால் நடிப்பில் இயக்குநர் கமல் இயக்கத்தில் வெளியான படம் 'உன்னிகளே ஒரு கத பறயாம்'. இந்த படம் வெளியாகி 37 வருடங்கள் ஆன நிலையில் இந்தப் படத்தில் நடித்த பங்கு பெற்ற அனைவரும் இதைக் கொண்டாடுவதற்காக சமீபத்தில் மீண்டும் ஒன்று கூடினர். இந்த நிகழ்வில் மோகன்லாலும் பங்கேற்றார்.
இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கார்த்திகா, வாட்ஸ் அப் குரூப் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் இந்த படத்தில் நடித்தவர்களை தேடிக்கண்டுபிடித்து ஒருங்கிணைத்து இந்த மீள் சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார்.. இவர் நாயகன் படத்தில் கமலின் மகளாகவும் பூவிழி வாசலிலே படத்தில் சத்யராஜின் ஜோடியாகவும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.