ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கேரளாவில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை பலத்த புயலை கிளப்பி உள்ளது. தோண்ட தோண்ட வரும் பூதம்போல பாலியல் புகார்கள் குவிந்து கொண்டு வருகிறது. இதை தொடர்ந்து தென்னிந்திய மாநிலங்களில் ஹேமா கமிட்டி போன்ற கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் கன்னட திரையுலககை சேர்ந்த 153 நடிகர், நடிகைகள் கையெழுத்திட்டு கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
அந்த கடிதத்தில் அவர் கூறப்பட்டிருப்பதாவது : நீதிபதி ஹேமா குழு அறிக்கையில், மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் கன்னட திரைத்துறையில் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்கள் குறித்து உடனடியாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.
கன்னட திரைத்துறையில் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் குறித்தும், பெண்களுக்கு பாதுகாப்பான, சமமான பணி சூழலை உருவாக்க தேவையான கொள்கைகளை வகுக்க வேண்டும் என்பது குறித்த விஷயங்களிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். 3 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும். அந்த அறிக்கையில் கூறப்படும் அம்சங்கள் பகிரங்கப்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.