சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி |
கடந்த மாதம் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல நூற்றுக்கணக்கானோர் தங்களது வீடுகளை, உடைமைகளை இழந்தனர். அந்த சமயத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவும் இந்திய துணை ராணுவமும் மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டு பலரின் உயிரை காப்பாற்றினர்.
குறிப்பாக கரை புரண்டு ஓடும் வெள்ளத்தில் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு செல்வதற்காக துணை ராணுவத்தினர் அமைத்த ஒரு தற்காலிக பாலம் மூலமாக மீட்பு பணி விரைவாக நடைபெற்று உயிரிழப்பு பெரிய அளவில் தடுக்கப்பட்டது. இதற்கு அப்போதே பொதுமக்களிடமிருந்தும் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்கள் கிடைத்தன.
இந்த நிலையில் நடிகை மஞ்சு வாரியர் மற்றும் நடிகர் டொவினோ தாமஸ் இருவரும் இந்த மீட்பு பணியில் ஈடுபட்ட 122 இன்பான்ட்ரி பட்டாலியனை சேர்ந்த துணை ராணுவ வீரர்களை நேரில் சென்று சந்தித்து தங்களது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து அவர்களை கவுரவித்துள்ளனர். இதுகுறித்த தகவலை புகைப்படத்துடன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகை மஞ்சு வாரியர்.