தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தெலுங்கு திரையுலகில் கடந்த 45 வருடங்களுக்கு மேலாக பிரபல நடிகராக இருப்பவர் ராஜேந்திர பிரசாத். தமிழில் வாசுகி, கீ, அனபெல்லா சேதுபதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது மகள் காயத்ரி நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். இவருக்கு வயது 38. இவருக்கு கணவரும் 10 வயது மகளும் இருக்கின்றனர். இவரது இறுதிச்சடங்கு இன்று நடந்தது. திரையுலகை சேர்ந்த பலரும் ராஜேந்திர பிரசாத்துக்கு தங்களது ஆறுதலை கூறி வருகின்றனர்.
நேற்று படப்பிடிப்பில் இருந்த ராஜேந்திர பிரசாத் தனது மகளுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை கேள்விப்பட்டதும் மருத்துவமனைக்கு விரைந்தார். ஆனாலும் அவரால் தன் மகளுடன் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை.
இதில் ராஜேந்திர பிரசாத்திற்கு கூடுதல் துயரம் என்னவென்றால் மகள் காயத்ரி தங்களை மீறி காதல் திருமணம் செய்து கொண்டதால் சில காலம் அவரிடம் இருந்து மகளின் குடும்பம் பிரிந்து இருந்தது. சமீபத்தில் தான் அனைத்தையும் மறந்து இரு குடும்பமும் ஒன்று சேர்ந்தது. இந்த நிலையில் காயத்ரியின் இந்த திடீர் மறைவு ராஜேந்திர பிரசாத்தை ரொம்பவே பாதித்துள்ளது. காயத்ரியை பார்க்கும்போதெல்லாம் என் அம்மாவை பார்ப்பது போலவே இருக்கும் என்று கண்கலங்கி கூறியுள்ளார் ராஜேந்திர பிரசாத்.