தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே என்கிற படம் வெளியானது. புது மனைவி தனக்கு அடங்கிப்போக வேண்டும் என நினைக்கும் திமிர்பிடித்த இளம் கணவனுக்கு அவள் எப்படி பாடம் புகட்டுகிறாள் என காமெடியாக இந்த படம் சொன்னது. அதனால் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது. இந்த படத்தை விபின் தாஸ் என்பவர் இயக்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக பிரித்விராஜ் மற்றும் இயக்குனர் பஷில் ஜோசப், நிகிலா விமல் ஆகியோரை வைத்து குருவாயூர் அம்பல நடையில் என்கிற படத்தை இயக்கினார்.
அந்த படமும் கடந்த மே மாதம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பிரித்விராஜூடன் தனது அடுத்த படத்திற்காக மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளார் இயக்குநர் விபின்தாஸ். இவர்களது கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு சந்தோஷ் டிராபி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தின் அறிவிப்பை பிரித்விராஜின் பிறந்தநாளான நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.