ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
கன்னட சினிமாவில் இயக்குரும், நடிகருமாக இருந்தவர் குரு பிரசாத். 2006ம் ஆண்டு 'மாதா' என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அதன்பின்னர் எட்டேலு மஞ்சுநாதா, டைரக்டர்ஸ் ஸ்பெஷல், எரடனே சாலா, ரங்கநாயகா உள்பட பல படங்களை இயக்கினார். சில படங்களில் நடித்துள்ளார்.
பெங்களூரு மதநாயக்கனஹள்ளி அப்பார்ட்மென்ட்டில் வசித்துவந்த நிலையில், மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 52 வயதான குரு பிரசாத் சமீபத்தில்தான் 2வது திருமணம் செய்தார். குருபிரசாத் கடும் நிதி நெருக்கடியில் இருந்தது அவரது பல படங்கள் முடிக்கப்படாமல் பாதியில் நிற்பது குருபிரசாத்தின் இயக்கத்தில் வெளியான கடைசி படமான 'ரங்கநாயகா' படம் தோல்வியைச் சந்தித்தது ஆகியவைதான் தற்கொலைக்கு காரணம் என்று போலீஸ் விசாரணையில் தெரிவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரது இரண்டாவது மனைவியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.