தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதில் நடித்த 10க்கும் மேற்பட்ட நடிகர்களுக்கு மிகப்பெரிய புகழ் வெளிச்சத்தையும் தேடித்தந்தது. அந்த பத்து நடிகர்களில் ஒருவராக நடித்திருந்தவர் நடிகர் கணபதி. இவர் கடந்த சனியன்று நள்ளிரவில் கேரளாவில் உள்ள அங்கமாலி என்கிற இடத்தில் இருந்து கலமசேரி என்கிற இடத்திற்கு கார் ஓட்டி சென்றுள்ளார். சிக்னல்களை மதிக்காமல் வெகு வேகமாக அவர் ஓட்டிச் சென்ற காரை அத்தாணி மற்றும் ஆலுவா உள்ளிட்ட இடங்களில் போலீசார் நிறுத்த சொல்லியும் அவர் நிறுத்தாமல் சென்றுள்ளார்.
ஒரு வழியாக அவரை கலமசேரியில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் அவர் மீது விதிமீறல்களுக்காகவும் மது போதையில் வாகனம் ஓட்டியதற்காகவும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். சமீப காலமாக இப்படி மலையாளத்தில் பல இளம் நடிகர்கள் மதுபோதையில் வாகனம் ஓட்டுவதும் அதனால் அடிக்கடி விபத்துக்களை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்குவதும் தொடர்கதையாகி வருகிறது.