தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 படம் வசூலில் 2 ஆயிரம் கோடியை நெருங்கிக் கொண்டிருந்தாலும், அல்ல அர்ஜுனுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் கடந்த மாதம் 4ந் தேதி புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டபோது நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது 9 வயது மகன் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளார்.
இந்த வழக்கில் அல்லு அர்ஜுனை குற்றவாளியாக்கிய அரசு, கடந்த 13ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த வழக்கில் அல்லு அர்ஜுனுக்கு ஐதராபாத் உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கு நடந்து வரும் நம்பள்ளி கோர்ட்டு நேற்று அல்லு அர்ஜுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஒரு லட்சம் ரூபாய் பிணயத் தொகையுடன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும், கோர்ட்டு அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது.