தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கன்னட நடிகர் தர்ஷன் சில மாதங்களுக்கு முன்பு தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடா என்பவருக்கு ரேணுகா சுவாமி தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி டார்ச்சர் கொடுத்தார் என்பதற்காக அவர் இந்த குற்றத்தில் ஈடுபட்டார் என சொல்லப்பட்டது.
நடிகை பவித்ரா கவுடா உட்பட 16 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். பல மாதங்களாக ஜாமின் மறுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் அனைவருக்குமே நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதனைத் தொடர்ந்து பெங்களூருக்கு மைசூருக்கு அருகில் உள்ள தனது பண்ணை வீட்டில் சென்று வசித்து வருகிறார் தர்ஷன்.
இந்த பிரச்சனைக்கு முன்னதாக தனது மனைவி விஜயலட்சுமி உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து இருந்தார் தர்ஷன். ஆனால் இந்த வழக்கில் தர்ஷனை வெளியே கொண்டு வருவதற்காக அவரது மனைவி விஜயலட்சுமி தான், கருத்து வேறுபாடுகளை மறந்து முனைப்புடன் செயல்பட்டு வந்தார். தர்ஷன் சிறையிலிருந்து வெளிவந்ததும் மனைவி விஜயலட்சுமி, மகன் வினீஷ் ஆகியோரும் தற்போது தர்ஷனுடன் தான் இந்த வீட்டில் இருக்கிறார்கள்.
இந்த சங்கராந்தி பண்டிகையை தனது குடும்பத்துடன் கொண்டாடி தனது ரசிகர்களுக்கும் வாழ்த்து கூறியுள்ளார் நடிகர் தர்ஷன். அவர் இப்படி குடும்பத்துடன் ஒன்றிணைந்து சந்தோசமாக பண்டிகையை கொண்டாடுவதை பார்த்து அவரது ரசிகர்கள், தங்களது பாஸ் திரும்பி வந்து விட்டார் என உற்சாகமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.