ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழில் அஜித் நடித்த வேதாளம் படத்தில் வில்லன்களில் ஒருவராக அறிமுகமானவர் நடிகர் கபீர் துகான் சிங். தொடர்ந்து றெக்க, காஞ்சனா 3, ஆக்ஷன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இன்னொரு பக்கம் தெலுங்கு, கன்னட மொழிகளிலும் பிஸியாக நடித்து வந்த இவர் கடந்த வருடம் மம்முட்டி நடிப்பில் வெளியான டர்போ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் மலையாள திரை உலகில் நுழைந்தார். அதைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான அஜயன்டே ரெண்டாம் மோசனம் என்கிற படத்திலும் வில்லனாக நடித்திருந்தார்.
ஆனால் சில வாரங்களுக்கு முன்பு உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான மார்கோ திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தான் இவர் அதிக அளவில் தற்போது மலையாள ரசிகர்களால் கவனிக்கப்பட்டுள்ளார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக மலையாளத்தில் தற்போது சுரேஷ் கோபி நடிப்பில் உருவாகி வரும் ஒத்த கொம்பன் என்கிற படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கபீர் துகான் சிங். இந்த படத்தை மேத்யூ தாமஸ் என்பவர் இயக்குகிறார்.