ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
விஜய் நடித்த 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு. தெலுங்கில் அவரது தயாரிப்பில் இந்த பொங்கலுக்கு இரண்டு படங்கள் வெளிவந்தன. ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிக்க சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான 'கேம் சேஞ்ஜர்', அனில் ரவிப்புடி இயக்கத்தில் வெங்கடேஷ் நடிக்க சுமார் 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான 'சங்கராந்திகி வஸ்தனம்'.
இதில் 50 கோடி பட்ஜெட்டில் தயாரான 'சங்கராந்திகி வஸ்தனம்' படம் அதை விட மூன்று மடங்கு அதிகமாக 160 கோடி வசூலித்து பெரும் வெற்றிப் படமாகியுள்ளது. அதனால், படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குனர் அனில் ரவிப்புடி, நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தனர். தயாரிப்பாளர் தில் ராஜு முடி காணிக்கை செலுத்தி மொட்டை அடித்துக் கொண்டார்.
பெரிய பட்ஜெட் படமான 'கேம் சேஞ்ஜர்'அவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்ற நிலையில் சிறிய படமான 'சங்கராந்திகி வஸ்தனம்' படம் அவருக்கு லாபத்தைக் கொடுத்துள்ளது. பட்ஜெட்டும், பிரம்மாண்டமும் ஒரு படத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்பதை இந்த வெற்றி காட்டுவதாக தெலுங்குத் திரையுலகினர் பேசிக் கொள்கிறார்களாம்.