தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

இன்றைய சினிமா உலகில் தான் போகும் இடமெல்லாம் ரசிகர்கள் சூழ்ந்திருக்க வேண்டுமென சில நடிகர்கள் என்னென்னமோ செய்கிறார்கள். இசை வெளியீடு விழாக்கள் நடந்தால் அரசியல் கட்சிகள் போல பணம் கொடுத்து கூட ஆட்களைக் கூட்டி வந்து கத்த வைக்கிறார்கள். அப்படியானவர்களுக்கு மத்தியில் மாறுபட்ட நடிகராக இருப்பவர் அஜித். அதற்காகவே பல வருடங்களுக்கு முன்பே தனது ரசிகர் மன்றங்களை துணிச்சலாகக் கலைத்தவர்.
திருப்பதியில் இன்று அதிகாலை சுப்ரபாத தரிசனம் செய்தார் அஜித். அவர் வந்த போது அருகில் வரிசையில் நின்றிருந்த சிலர் 'தல தல' என்று கூச்சலிட்டார்கள். ஆனால், அப்படி செய்யக் கூடாது, இது கோயில் என்று சைகை செய்து அவர்களை அமைதியாக இருக்கச் சொன்னார். அதேபோல், காது கேளாத நபர் ஒருவர் செல்பி கேட்க, அவரின் போனை வாங்கி செல்பி எடுத்து கொடுத்தார் அஜித். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
கடந்த வாரம் பாலக்காடு அருகே தனது குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வந்தார் அஜித். அடுத்து திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அஜித்தின் இந்த பக்தி வழிபாடு சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.