தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கடந்த வருடம் மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் 'ஆவேசம்' என்கிற திரைப்படம் வெளியானது. இயக்குனர் ஜித்து மாதவன் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார். ரங்கன் தாதா என்கிற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் பஹத் பாசில் நடித்திருந்தார். முழுக்க முழுக்க காமெடி கலந்த ஒரு கேங்ஸ்டர் படமாக வித்தியாசமான கதை சொல்லலில் இது உருவாகி இருந்தது.
மலையாளத்தையும் தாண்டி தமிழிலும் இந்த படம் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்ல ஹிந்தியிலும் இந்த படம் ரீமேக் ஆக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் இருக்கிறது என்று இந்த படத்தில் பஹத் பாசிலின் வலது கையாக முக்கிய வேடத்தில் நடித்திருந்த சஜின் கோபு என்பவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இவர் தற்போது பஷில் ஜோசப் கதையின் நாயகனாக நடித்து வெளியாகி உள்ள 'பொன் மேன்' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தான், ஆவேசம் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான கதை வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று கூறியுள்ளார். அதே சமயம் ஆவேசம் பட இயக்குனர் ஜித்து மாதவன் அடுத்ததாக மோகன்லாலை வைத்து படம் இயக்க ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்தை முடித்துவிட்டு ஒருவேளை ஆவேசம் இரண்டாம் பாகத்தை கையில் எடுக்கலாம் என்று தெரிகிறது.