ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள திரையுலகில் சிறிய நடிகராக அறிமுகமாகி தற்போது தென்னிந்திய அளவில் பிரபல நடிகர்களுக்கு வில்லனாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. 'பீஸ்ட்' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் அதன் பிறகு அதன் இயக்குனரையும் நடிகர் விஜய்யின் நடிப்பையும் கிண்டலடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். தெலுங்கில் வெளியான 'தசரா', பின்னர் தமிழில் 'ஜிகர்தண்டா 2' உள்ளிட்ட படங்களிலும் வில்லனாக நடித்த இவர் அவ்வப்போது ஏதாவது சர்ச்சையாக பேசி சிக்குவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
கடந்த 2015ல் கொச்சி கடவந்துரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருள் பயன்படுத்தினார் என போலீசார் இவரை கைது செய்தனர். இவருடன் சேர்ந்து போதைப் பொருள்கள் பயன்படுத்தினார்கள் என இன்னும் ஏழு பேரும் கைது செய்யப்பட்டனர். அன்பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார் ஷைன் டாம் சாக்கோ. சொல்லப்போனால் இந்த கைது வழக்கின் மூலம் தான் இவர் ஓரளவுக்கு பிரபலமாக துவங்கினார். இந்த வழக்கு பதியப்பட்டு 10 வருடம் கழிந்துள்ள நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த எர்ணாகுளம் கூடுதல் நீதிமன்றம் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்ட எட்டு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.