ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை |

போதைப் பொருளான கோகைன் பயன்படுத்தியது மற்றும் வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக, நடிகர் ஸ்ரீகாந்த், 46, கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் முதல் வகுப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விஷயம் தமிழ்த் திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீகாந்திடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேலும் சில சினிமா பிரபலங்களும் பெயரும் இந்த விஷயத்தில் அடிபடுகிறது. குறிப்பாக கழுகு பட நடிகர் கிருஷ்ணாவும் இந்த விவகாரத்தில் சிக்கி உள்ளார். இதுதொடர்பாக அவரை விசாரணைக்கு வரச் சொல்லி போலீஸ் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவர் கேரளாவில் படப்பிடிப்பில் இருந்ததாக சொல்லப்பட்டது. அதேசமயம் அவர் தலைமறைவானதாகவும் தகவல் வெளியாக அவரை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் தனது வக்கீல் உடன் போலீஸ் விசாரணைக்கு கிருஷ்ணா ஆஜர் ஆனார். ரகசிய இடத்தில் நடந்த விசாரணையில் அவரிடம் போலீஸார் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டுள்ளனர். மேலும் அவர் போதை பொருள் பயன்படுத்தினாரா என்பதை கண்டறிய அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.