பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் | தலைவன் தலைவி 50 கோடி வசூல் என அறிவிப்பு | யு டியூப் ரிலீஸ் : அமீர்கான் வழியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா ? | இன்று 7 படங்கள் ரிலீஸ் : முன்பதிவு நிலவரம் என்ன? |
போதைப் பொருளான கோகைன் பயன்படுத்தியது மற்றும் வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக, நடிகர் ஸ்ரீகாந்த், 46, கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் முதல் வகுப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விஷயம் தமிழ்த் திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீகாந்திடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேலும் சில சினிமா பிரபலங்களும் பெயரும் இந்த விஷயத்தில் அடிபடுகிறது. குறிப்பாக கழுகு பட நடிகர் கிருஷ்ணாவும் இந்த விவகாரத்தில் சிக்கி உள்ளார். இதுதொடர்பாக அவரை விசாரணைக்கு வரச் சொல்லி போலீஸ் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவர் கேரளாவில் படப்பிடிப்பில் இருந்ததாக சொல்லப்பட்டது. அதேசமயம் அவர் தலைமறைவானதாகவும் தகவல் வெளியாக அவரை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் தனது வக்கீல் உடன் போலீஸ் விசாரணைக்கு கிருஷ்ணா ஆஜர் ஆனார். ரகசிய இடத்தில் நடந்த விசாரணையில் அவரிடம் போலீஸார் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டுள்ளனர். மேலும் அவர் போதை பொருள் பயன்படுத்தினாரா என்பதை கண்டறிய அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.