ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மோகன்லால் நடிப்பில் கடந்த 2019ல் நடிகர் பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமான படம் லூசிபர். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகமாக எம்புரான் திரைப்படம் உருவாகியுள்ளது. வரும் மார்ச் 27ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. என்றாலும் இதனுடன் முதன்முறையாக லைகா நிறுவனமும் கைகோர்த்து இந்த படத்தின் தயாரிப்பில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.
இந்தப் படத்தின் ரிலீஸ் பணிகளில் சுனக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்பு இருக்கிறது என்றும் சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவியது. காரணம் லைகா நிறுவனத்தின் முந்தைய படங்களுக்கு வியாபார ரீதியாக ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக அது எம்புரான் பட ரிலீஸிலும் எதிரொலிக்கிறது என்பதால் அதன் ரிலீஸ் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் லைகா நிறுவனத்தை இந்த வியாபாரத்திலிருந்து ஒதுக்கி வைத்துவிட்டு மோகன்லாலின் ஆசிர்வாத் நிறுவனமே ரிலீஸ் பணிகளை முழுமையாக கையில் எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. படம் தடையின்றி வெளியாகும் என்பதை குறிப்பிடுவது போல, தற்போது படத்தின் இயக்குனர் பிரித்விராஜ் எம்புரான் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை பகிர்ந்து கொண்டு உள்ளார்.