துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி |
மலையாள திரையுலகில் 40 வருடங்களுக்கு மேலாக பிரபல பாடலாசிரியராக அறியப்பட்டவர் மான்கொம்பு கோபாலகிருஷ்ணன். 78 வயதான இவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் நேற்று காலமானார். இவர் மலையாளத்தில் 200 படங்களில் சுமார் 700க்கும் மேற்பட்ட சூப்பர் ஹிட்டான பல பாடல்களை எழுதியுள்ளார். அது மட்டுமல்ல எம்.எஸ் விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
இன்னொரு பக்கம் கேரளாவில் வெளியாகும் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிமாற்று படங்களுக்கு மலையாளத்தில் வசனம் எழுதுவதிலும் கை தேர்ந்தவராக விளங்கினார். குறிப்பாக இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான மகதீரா, ஈகா, பாகுபலி, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்கள் மலையாளத்தில் வெளியானபோது அதற்கு வசனம் எழுதியது இவர்தான். இவரது மறைவுக்கு மலையாள திரை உலகை சேர்ந்தவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.