சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் விஸ்வக் சென். ஐதராபாத்தில் உள்ள இவரது வீட்டில் விலை உயர்ந்த வைர நெக்லஸ் ஒன்றும் 2.2 லட்சம் ரூபாய் பணமும் களவு போயுள்ளது. ஞாயிறு அதிகாலை 5 மணி அளவில் மூன்று மாடி கொண்ட அவரது வீட்டில் அவரது சகோதரி வான்மை தங்கியிருக்கும் மூன்றாவது மாடி வழியாக வீட்டுக்குள் நுழைந்த திருடன் சத்தம் காட்டாமல் நகையையும் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிகிறது.
நீண்ட நேரம் கழித்து கண் விழித்த வான்மை வீட்டில் உள்ள பொருள்கள் எல்லாம் அலங்கோலமாக கிடப்பதை பார்த்து அதன் பிறகு நகையும் பணமும் களவு போய் உள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். தற்போது விஸ்வக் சென்னின் தந்தை இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். வீட்டில் கிடைத்த கைரேகைகளையும் சிசிடிவி காட்சிகளையும் வைத்து போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.