தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மலையாள திரையுலகில் மோகன்லால், மம்முட்டி அடுத்தபடியாக சீனியர் நடிகர்களின் இப்போதும் ஆக்டிவாக நடித்து வருபவர் திலீப். ஆனால் கடந்த 2017ல் பிரபல நடிகை ஒருவரின் கடத்தல் வழக்கில் சிக்கி சிறை சென்று ஜாமினில் வெளிவந்த பிறகு பெரும்பாலும் படங்களில் நடிப்பதை மட்டுமே செய்து கொண்டு அமைதியாக இருந்து வருகிறார். அவர் சிறையில் இருந்த சமயத்தில் கூட அவரது நடிப்பில் வெளியான ராம்லீலா திரைப்படம் 100 கோடி வசூலித்து ரசிகர்கள் அவர் மேல் கொண்டிருந்த அபிமானத்தை வெளிப்படுத்தியது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கதைத்தேர்வில் அவர் கோட்டை விடுவதால் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான பிரின்ஸ் அன்ட் பேமிலி படம் டீசன்டான வெற்றியை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் வெற்றி சந்திப்பை படக்குழுவினர் நடத்தினார்கள்.
இந்த நிகழ்வில் நடிகர் திலீப் பேசும்போது, “எப்படி எனக்கு இக்கட்டான சமயத்தில் ராம்லீலா திரைப்படம் கை கொடுத்ததோ, அதேப்போல தற்போது பிரின்ஸ் அன்ட் பேமிலி திரைப்படமும் எனக்கு கை கொடுத்துள்ளது. எட்டு ஆண்டுகளாக நான் என்னுடைய படங்களை பற்றி மட்டுமே பேசி வருகிறேன். வேறு எந்த விஷயத்தை பற்றி பேசுவதற்கும் எனக்கு சுதந்திரம் இல்லை. ஆனால் ஒருநாள் கடவுள் நிச்சயமாக நான் பேசுவதற்கு எனக்கு அந்த வாய்ப்பை கொடுப்பார். அந்த ஒரு நாள் வரும் வரை நான் அமைதியாக காத்திருப்பேன்” என்று தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.