தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் நடித்த 'ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா' சுருக்கமாக ‛ஜேஎஸ்கே' என்ற மலையாளப் படம் கடந்த மாதம் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழு படத்தின் டைட்டிலில் ஜானகி என்ற பெயரை நீக்க வேண்டும். அதோடு படத்தின் வசனத்தில் வரும் ஜானகி என்ற சொல்லையும் நீக்கினால்தான் படத்திற்கு சான்றிதழ் தர முடியும் என்று கூறிவிட்டது. இதனால் படம் திட்டமிட்டபடி வெளிவரவில்லை.
இதை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நீதிபதி கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தை பார்த்தார். இந்த நிலையில் நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. தணிக்கை குழு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் படத்தில் கதாபாத்திரத்தின் பெயர் ஜானகி வித்யாதரன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே படத்தின் பெயரை வி. ஜானகி என்றோ ஜானகி, வி என்றோ மாற்றலாம்.
மேலும் நீதிமன்ற காட்சிகளில் குறுக்கு விசாரணையின் போது 2 இடங்களில் ஜானகி என்ற பெயரை மியூட் செய்ய வேண்டும். மற்ற இடங்களில் ஜானகியின் பெயரை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த மாற்றங்களை செய்தால் உடனடியாக படத்திற்கு அனுமதி அளிக்கத் தயார். என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை படத்தின் தயாரிப்பாளர் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணையை 16ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.